எச்சரிக்கை

எச்சரிக்கை

Thursday 14 January 2016

உவகைப் பெருதினம் தை

மனத்தின் மாசுகள் மண்ணொடு போக
நிலத்தின் குப்பை நெருப்பில் பொசுங்க
புகையாய் வானில் புண்ணியம் பெருகிப்
பொங்கி வருவதே தை

நாநிலம் ஒளியில் நாளும் செழிக்க
உயிர்கள் வாழவே உலகச் சுருளை
ஒளியால் நிரப்பி வடதிசை போகும்
கதிரவன் உவப்பதே தை

நல்லோர் மகிழ்ந்து நலமே திகழ
நல்வழி திறந்து நலமுடன் வாழ
உழைப்பின் பலனில் உள்ளம் மகிழும்
உவகைப் பெருதினம் தை

ஒளியும் நிழலும் ஒருங்கே உடன்வர
நாளும் பொழுதும் நற்பெரு வலிவும்
உணவும் நீரும் உவகையும் அளிக்கும்
பரிதியின் தாளில் பணி.

- பார்வதேயன்

No comments:

Post a Comment