ஈசன் என்றொரு பெயராலும் - இந்த
மானுடர் என்னைச் சுட்டிடுவார் - நான்
வேறு என்றவர் எண்ணிடுவார்
என்னை வணங்குதல் ஏனென்றே - இங்கு
வணங்கும் பலரும் தெளியாதார் - அவர்
தெளிந்தோர் சொல்லும் கேளாதார்
தென்னை மரமாய் உயர்வதுவும் - சில
பயிர்கள் செடியாய் நிற்பதுவும் - தம்
இயல்பின் படியே என்றறிக
திருட்டும் புரட்டும் தவறாமே - எனக்கு
நன்மை தீமை பிரிவில்லை - மாந்தர்
வினைத்ததன் பயனை வாழ்கின்றார்
நல்லன அல்லன பகுத்திங்கே - வினை
பலவும் புரியும் மாந்தர்கள் - அதன்
எதிர்வினை தாங்கி வாழ்வாரே
உம்வினை அதனின் எதிர்வினை - இந்தச்
சங்கிலித் தொடரில் உழல்கின்றீர் - எனை
அல்லன நேர்ந்தால் பழிக்கின்றீர்!
என்னைக் கேள்விகள் கேட்காதீர் - உமது
மனதின் உள்ளே துழாவுதலே - நீவிர்
உம்மை அறிவதின் ஆரம்பம்
சற்றே உம்மை உணர்கையிலே - இங்கு
உயிர்கள் ஒன்றே என்கின்ற - அழியா
மெய்மை உணர்வீர் கொள்.
- பார்வதேயன்.
No comments:
Post a Comment