எச்சரிக்கை

எச்சரிக்கை

Saturday 10 November 2012

ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் எனும் மஹான்

மஹான்கள் பலரும் மலர்ந்த தேசம்
மஹிமைகள் மிளிரும் பாரத தேசம்
மனத்தினை அடக்கி மாதவம் புரியும்
மாபெரும் ஞானியர் இங்கே அதிகம்


நுணலுக்கு இரங்கி நிழல்தரு நாகம்
நல்லதோர் முதிர்ச்சி காட்டிடும் நேசம்
நான்மறை தெளிந்துரை எழுதிய சங்கரர்
நல்லதோர் பீடத்துக் குகந்த இடமாம்

துங்கை நதியின் தூயதோர் கரையில்
தங்கிச் சிறப்பாய் ஞானம் விளக்க
தங்கத் தாயவள் சாரதை  அருளுடன்
தன்னிக ரற்ற சங்கரர் துணிந்தார்

கல்விச் சிறப்பால் ஞான பலத்தால்
கலிபல விரட்டும் குருஞான மரபில்
காலடி புதுப்பித்த மஹானின் சீடராய்
காலடி பதித்தவர் ஆத்ம ஞானியார்

சிருங்க கிரியிலே பிறந்த சீராளர்
குருவின்அருளொடு கல்வி பெற்று
குருவின் பாதம் எண்ணி வாழ்வதே
சிறப்பெனத் தெளிந்த ஞானப் பிழம்பு

ஞாயிறுக் கொளிதரும் ஞானக் கடலிவர்
சிந்தை குளிர்விக்கும் மதிநிகர் முகத்தவர்
சிந்தனை என்பதே உலக நன்மைக்காம்
ஞாயிற்றுக் கிழமை அதில் மட்டுமில்லை

குருவெனில் இவராம் ஞானத் திருவிவர்
என்றே சீடர்பலர் பகரக் கேட்டயான்
குருவெனக் கண்டதோ பாரதீ தீர்த்தரை
என்குரு போலவே இவர்பெரும் ஞானியாம்

என்றே மனதில் நினைத்திடும் நிலையே
சிவனார் முதலாகி சங்கரர் கைதூக்கி
பாரதீதீர்த்த ரெனத் தொடர் ஞானமரபை
வரிசை யிட்டு வணங்கி வளர்வோம்.

-பார்வதேயன்.

No comments:

Post a Comment