எச்சரிக்கை

எச்சரிக்கை

Saturday, 22 August 2015

காதலில் கசியும் காலத்திலும் கையில்
சங்கு சக்கரம் சகிதமாய் விளங்கும்
காக்கும் கடவுள் காட்டுகிற சேதி
கணமும் மறவாதே கடமை.

Tuesday, 30 June 2015

கேதாரி அடி சேர்ந்தார்க்கு

அறத்தினை ஒழுகும் மக்கள்
அரனையே துதிக்கும் மக்கள்
அவன்பதம் பணிய மலைமேல்
அஞ்சாது வந்த மக்கள்

Friday, 24 April 2015

காலடிச் சங்கரர் காலடி பணி

நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த
நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன்
உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே
மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே.

கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட
பிறப்பிறப்புச் சுழலிதிலே பிறந்துழலும் மனம்மாற்ற
மெய்யின் தத்துவங்கள் முழுதுணர்ந்த பெரியோனே
பொற்பாதம் மனதாரப் பணிகின்றேன் சங்கரரே


Thursday, 23 April 2015

சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்

காலடி மண்ணில் உதித்துக்
காலம் பலவாய்த் தொடர்ந்த
தொல்லற முறைமை தொகுத்து
அறுவகை வழியாய் வைத்தான்

Saturday, 14 February 2015

களவின் திருவுரு

களவென்ற கண்ணீரே களவென்று ஐயமாம்
களவாணி புத்தியிலே களவன்றி வேறில்லை
அழுக்காறு மிகுதியால் அழுக்கான மனங்களிலே
அறத்துக்கு இடமில்லை அறி.


பொன்னைத் திருடிவிட்டுப் பருப்பை நிரைகொடுத்து
மனதில் நஞ்சுடனே மாற்றாரைப் பழியிட்ட
கள்மனம் எரித்திட்ட கண்கண்ட தெய்வமே
எரித்தாட் கொண்டாராம் தெளி.
 

நூறுதொடும் கிழாரும் நாற்றமிகு வன்மத்தில்
உற்றாரிடர் கண்டாங்கே உவந்தே களித்திருக்க
அரையாயுள் தாண்டிய அந்நியரை நோவதேனோ
வன்மம் வயதறியா தறி!

அல்லவை அறுத்து அறத்தினை நாட்டலே
வாழ்வின் கடமையென வழிகாட்டும் வேலோடு
சூரனை வதைத்துச் சிரமுயர்த்தி அடியாரைக்
காக்கின்ற குமரா கேள்!

களவெனும் ஒழுக்கமும் கைக்கொளா ஒருவனில்
களங்கத்தைக் கற்பித்த கலிமிக்க மனத்திற்கு
தக்கதோர் பாடத்தைத் தெளிவாகப் புகட்டிடுவாய்
சிரமுந்தன் திருவடியில் சரண்!