அண்டமெலாம் அன்பில் திளைத்து செழித்திட
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPJjbzOixCJLWhTfnWD0oDlJXCYFIk4PFFUNi3NYpnTgQJfy-9TIOLt1n6JlUibb3_4fdEuRNlW9j-Xne4IYVvuedUVXGG_azH-abHDGSDLa9Prt8taayJ4g9kaH40zhMf_XPytkqzZYEb/s200/Atal-Bihari-Vajpayee.jpg)
அன்னை பூமியிது தலைதூக்கி நின்றிட
அன்பின் மைந்தராய் வையத்து மாந்தர்
கைகோர்த்து நடை போட வேண்டும்.
அனுபவம் இவையெலாம் கனவென்று எள்ளினும்
அணுவளவு சாத்தியமும் இல்லையெனும் போதிலும்
அஞ்சாத நெஞ்சோடு போராட வேண்டும்
அகம் தூயதாக்கி முன்னேற்றம் காணக்
கைகோர்த்து நடை போட வேண்டும்
ஆன்றவிந் தடங்கிய சான்றோர் சொல்லும்
ஆலோசனையும் கேட்டு வாழ்வது வேண்டும்
ஆற்றலெலாம் கொண்டு உலகம் தழைக்க
ஆரோக்கிய மனதுடன் மனிதம் செழிக்க
கைகோர்த்து நடை போட வேண்டும்!!!
(அடல்ஜி அவர்களின் Kadham Milaa kar chalna hoga என்ற கவிதை படித்து அதன் தாக்கத்தில் நான் எழுதிய கவிதை இது)