நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த
நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன்
உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே
மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே.
கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட
பிறப்பிறப்புச் சுழலிதிலே பிறந்துழலும் மனம்மாற்ற
மெய்யின் தத்துவங்கள் முழுதுணர்ந்த பெரியோனே
பொற்பாதம் மனதாரப் பணிகின்றேன் சங்கரரே