ஈசன் என்றொரு பெயராலும் - இந்த
மானுடர் என்னைச் சுட்டிடுவார் - நான்
வேறு என்றவர் எண்ணிடுவார்
என்னை வணங்குதல் ஏனென்றே - இங்கு
வணங்கும் பலரும் தெளியாதார் - அவர்
தெளிந்தோர் சொல்லும் கேளாதார்
எச்சரிக்கை
Wednesday, 25 January 2017
Thursday, 14 January 2016
உவகைப் பெருதினம் தை
மனத்தின் மாசுகள் மண்ணொடு போக
நிலத்தின் குப்பை நெருப்பில் பொசுங்க
புகையாய் வானில் புண்ணியம் பெருகிப்
பொங்கி வருவதே தை
நிலத்தின் குப்பை நெருப்பில் பொசுங்க
புகையாய் வானில் புண்ணியம் பெருகிப்
பொங்கி வருவதே தை
Saturday, 22 August 2015
சங்கு சக்கரம் சகிதமாய் விளங்கும்
காக்கும் கடவுள் காட்டுகிற சேதி
கணமும் மறவாதே கடமை.
Tuesday, 30 June 2015
கேதாரி அடி சேர்ந்தார்க்கு
அறத்தினை ஒழுகும் மக்கள்
அரனையே துதிக்கும் மக்கள்
அவன்பதம் பணிய மலைமேல்
அஞ்சாது வந்த மக்கள்
அரனையே துதிக்கும் மக்கள்
அவன்பதம் பணிய மலைமேல்
அஞ்சாது வந்த மக்கள்
Friday, 24 April 2015
காலடிச் சங்கரர் காலடி பணி
நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த
நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன்
உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே
மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே.
கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட
பிறப்பிறப்புச் சுழலிதிலே பிறந்துழலும் மனம்மாற்ற
மெய்யின் தத்துவங்கள் முழுதுணர்ந்த பெரியோனே
பொற்பாதம் மனதாரப் பணிகின்றேன் சங்கரரே
நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன்
உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே
மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே.
கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட
பிறப்பிறப்புச் சுழலிதிலே பிறந்துழலும் மனம்மாற்ற
மெய்யின் தத்துவங்கள் முழுதுணர்ந்த பெரியோனே
பொற்பாதம் மனதாரப் பணிகின்றேன் சங்கரரே
Thursday, 23 April 2015
சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்
காலடி மண்ணில் உதித்துக்
காலம் பலவாய்த் தொடர்ந்த
தொல்லற முறைமை தொகுத்து
அறுவகை வழியாய் வைத்தான்
காலம் பலவாய்த் தொடர்ந்த
தொல்லற முறைமை தொகுத்து
அறுவகை வழியாய் வைத்தான்
Saturday, 14 February 2015
களவின் திருவுரு
களவென்ற கண்ணீரே களவென்று ஐயமாம்
களவாணி புத்தியிலே களவன்றி வேறில்லை
அழுக்காறு மிகுதியால் அழுக்கான மனங்களிலே
அறத்துக்கு இடமில்லை அறி.
பொன்னைத் திருடிவிட்டுப் பருப்பை நிரைகொடுத்து
மனதில் நஞ்சுடனே மாற்றாரைப் பழியிட்ட
கள்மனம் எரித்திட்ட கண்கண்ட தெய்வமே
எரித்தாட் கொண்டாராம் தெளி.
நூறுதொடும் கிழாரும் நாற்றமிகு வன்மத்தில்
உற்றாரிடர் கண்டாங்கே உவந்தே களித்திருக்க
அரையாயுள் தாண்டிய அந்நியரை நோவதேனோ
வன்மம் வயதறியா தறி!
அல்லவை அறுத்து அறத்தினை நாட்டலே
வாழ்வின் கடமையென வழிகாட்டும் வேலோடு
சூரனை வதைத்துச் சிரமுயர்த்தி அடியாரைக்
காக்கின்ற குமரா கேள்!
களவெனும் ஒழுக்கமும் கைக்கொளா ஒருவனில்
களங்கத்தைக் கற்பித்த கலிமிக்க மனத்திற்கு
தக்கதோர் பாடத்தைத் தெளிவாகப் புகட்டிடுவாய்
சிரமுந்தன் திருவடியில் சரண்!
களவாணி புத்தியிலே களவன்றி வேறில்லை
அழுக்காறு மிகுதியால் அழுக்கான மனங்களிலே
அறத்துக்கு இடமில்லை அறி.
பொன்னைத் திருடிவிட்டுப் பருப்பை நிரைகொடுத்து
மனதில் நஞ்சுடனே மாற்றாரைப் பழியிட்ட
கள்மனம் எரித்திட்ட கண்கண்ட தெய்வமே
எரித்தாட் கொண்டாராம் தெளி.
நூறுதொடும் கிழாரும் நாற்றமிகு வன்மத்தில்
உற்றாரிடர் கண்டாங்கே உவந்தே களித்திருக்க
அரையாயுள் தாண்டிய அந்நியரை நோவதேனோ
வன்மம் வயதறியா தறி!
அல்லவை அறுத்து அறத்தினை நாட்டலே
வாழ்வின் கடமையென வழிகாட்டும் வேலோடு
சூரனை வதைத்துச் சிரமுயர்த்தி அடியாரைக்
காக்கின்ற குமரா கேள்!
களவெனும் ஒழுக்கமும் கைக்கொளா ஒருவனில்
களங்கத்தைக் கற்பித்த கலிமிக்க மனத்திற்கு
தக்கதோர் பாடத்தைத் தெளிவாகப் புகட்டிடுவாய்
சிரமுந்தன் திருவடியில் சரண்!
Subscribe to:
Posts (Atom)

