எச்சரிக்கை

எச்சரிக்கை

Sunday, 19 August 2012

ஈழோத்ஸவ கான மஞ்சரி

தீன கருணாகரனே ராஜபக்‌ஷே லங்கைத் தலைவனே!
ஈழப் போரது முடிந்தபோதும்,
ஈழம் தனியே இல்லை எனினும்
ஈழம்காட்டிப் பிழைக்கும் நிலை எமக்கே
லங்கைத் தலைவனே ஐயா.. லங்கைத் தலைவனே!!
(தீன)

Monday, 16 July 2012

குருவடி வணங்குதும்

குருவே இறையை உணர்த்துவர் அவரையே
முதலில் வணங்குதல் முறை.

குருவின் கருணை பெரிதாம் பணிவே
அதனில் திளைக்கும் வழி.

சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல்
குருவின் திறமே காண்.

குருதரும் ஞானம் அடையத் தேர்ந்திடல்
சீடனின் திறமாம் தெளி.

Friday, 15 June 2012

வருக நீர் எம்மான்!


ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக
ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை
ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும்
ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ?

Wednesday, 30 May 2012

கவிஞனா நீ? உன்னைப் போல் இல்லை.

30 வருடங்களுக்கு முன் கண்ணதாசனைப் பார்த்து நீயும் ஒரு  கவிஞனா எனக் கேட்டார் கருணாநிதி. அதற்குக் கண்ணதாசனின் பதில் கவிதை இது.

    அஞ்சாதா சிங்கமென்றும்
    அன்றெடுத்த தங்கமென்றும்
    பிஞ்சான நெஞ்சினர் முன்
    பேதையர்முன் ஏழையர் முன்
    நெஞ்சாரப் பொய்யுரைத்து
    தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
    பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
    பண்புடையான் கவிஞ‌னெனில்
    நானோ கவிஞ‌னில்லை
    என்பாட்டும் கவிதையல்ல‌.

Friday, 25 May 2012

ஆண்டியின் நையாண்டி

நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே
பெட்ரோல் விலை ஏற்றம்.

வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி
விலையிலே நிகழ்தல் சாபம்.

Thursday, 24 May 2012

எம் குரு ஸ்ரீ மஹாஸந்நிதானம்

குருவின் அருளே இறையைக் காட்டிடும்
குருவின் வாக்கே வளமை கூட்டிடும்
குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால் 
குருவை வணங்குதல் தலை.
 
பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்
பாரதம் போற்றிடும் ஞானத்திரு வடிவம்
மறைபொருள் உணர்ந்த மனமோ ஸ்படிகம்
மந்திரம் நீர்வாழும் தலம்.

Friday, 11 May 2012

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்
             உன்னருள் வேண்டு கின்றேன்
 அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்
             வற்றாத பொருள் வேண்டுமே!