எச்சரிக்கை

எச்சரிக்கை

Sunday, 20 January 2013

விவேகத்தின் வெள்ளி


தமிழ்தாமரை மின்னிதழில் வெளிவந்த என் கவிதை*





பாரதத்தின் கிழக்கிலே வங்கத்தில் உதித்திட்ட
ஞானத்தின் முழு ஞாயிறே - வேத
ஞானத்தை ஞாலமெலாம் பரப்பவே புறப்பட்ட
பார்புகழும் எழு ஞாயிறே.

Thursday, 22 November 2012

சாதிகள் எங்கும் உண்டு,

 இசுலாமிய நண்பர் ஒருவர் அம்மதத்தில் சாதிகள் இல்லை என்றும் அடக்குமுறைகள் இல்லை என்றும் பொயுரைத்து மதமாற்ற ஊக்கம் போன்றதொரு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். சாதிகள் இருக்குதடி பாப்பா என்று மகாகவியை வேறு திரித்துத் துணை கொண்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக மூன்று நிமிடங்களில் எழுதி முகநூலில் தந்ததோடு இங்கே சற்றே விரிவு செய்து பகிர்கிறேன். 

Saturday, 10 November 2012

ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் எனும் மஹான்

மஹான்கள் பலரும் மலர்ந்த தேசம்
மஹிமைகள் மிளிரும் பாரத தேசம்
மனத்தினை அடக்கி மாதவம் புரியும்
மாபெரும் ஞானியர் இங்கே அதிகம்

Saturday, 29 September 2012

ஏசு மத நிராகரணம்

மருள் நீக்கி அருள்பெருக்கும் விஷயங்களில் சத்தற்றதாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தை 400 ஆண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் தர்க்க ரீதியாக நிராகரித்துள்ளனர். வன்முறையின் மூலம் எதிர்ப்பை அன்றிலிருந்தே சமாளித்துள்ளனர் மதம் பரப்ப வந்தேறியவர்கள்.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய ஏசு மத நிராகரணம் என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது. 

Sunday, 16 September 2012

போடோ செய்த பாவம் என்ன?



பக்கம் பக்கமாய் கொத்துக் கொத்தாய்
மாநிலம் பரவிய குண்டுகள் அனைத்தும்
புல்லர் புனிதப் போர்வை போர்த்துப்
பயத்தின் பாற்படு செய்கை பாரீர்.


Sunday, 19 August 2012

ஈழோத்ஸவ கான மஞ்சரி

தீன கருணாகரனே ராஜபக்‌ஷே லங்கைத் தலைவனே!
ஈழப் போரது முடிந்தபோதும்,
ஈழம் தனியே இல்லை எனினும்
ஈழம்காட்டிப் பிழைக்கும் நிலை எமக்கே
லங்கைத் தலைவனே ஐயா.. லங்கைத் தலைவனே!!
(தீன)

Monday, 16 July 2012

குருவடி வணங்குதும்

குருவே இறையை உணர்த்துவர் அவரையே
முதலில் வணங்குதல் முறை.

குருவின் கருணை பெரிதாம் பணிவே
அதனில் திளைக்கும் வழி.

சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல்
குருவின் திறமே காண்.

குருதரும் ஞானம் அடையத் தேர்ந்திடல்
சீடனின் திறமாம் தெளி.